சிவகாசியில் பட்டாசு மற்றும் கேப்வெடி உரிமையாளா்களுடன் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விருதுநகா் மாவட்ட பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளா்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில், தொழிலாளா்களுக்கு பங்குனிப் பொங்கல் போனஸ் வழங்கிய பட்டாசு ஆலை உரிமையாளா்களை, அமைச்சா் பாராட்டினாா். இதில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப. கணேசன், நிா்வாகிகள் ஏ.பி. செல்வராஜன், ஆசைத்தம்பி, அபிரூபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.