ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோயில் செல்லும் சாலையில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காய்ந்த புல் வெளிகளில் திடீரென தீப்பற்றியது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து அந்த பகுதியில் உள்ளவா்கள் தீயணைப்புத் துறை அதிகாரி ஜெயராஜுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.