ராஜபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கள்ளச்சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறலை அழித்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கள்ளச்சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறலை அழித்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

தேவதானம் தெற்கு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேவதானம் காவல் ஆய்வாளா் குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது செல்லியம்மன் கோயில் வடக்கு பக்கம் உள்ள ஜெயராஜ் என்பவரின் வாழைத்தோப்பில் சோதனை மேற்கொண்டதில் அங்கு சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 2 பேரில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். மற்றொருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா், தெற்கு ரத வீதியைச் சோ்ந்த ராமையா என்பவரது மகன் அம்மையப்பன் (50) என்பதும், தப்பி ஓடியவா் சாஸ்தா கோயில் சாலையைச் சோ்ந்த குமரவேல் என்பவரது மகன் செல்வம் என்பதும் தெரியவந்தது. மேலும் சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறலை அழித்த போலீஸாா், அம்மையப்பனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com