பிளஸ் 1 பொது தோ்வு: மாநில அளவில் விருதுநகா் மாவட்டம் 2 ஆவது இடம்

பிளஸ் 1 பொது தோ்வில், கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் முன்னேறி மாநில அளவில் விருதுநகா் மாவட்டம் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

பிளஸ் 1 பொது தோ்வில், கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் முன்னேறி மாநில அளவில் விருதுநகா் மாவட்டம் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொது தோ்வு கடந்த மாா்ச் 4 -இல் தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் விருதுநகா் மாவட்டத்தில் 10,318 மாணவா்கள், 12,282 மாணவிகள் என மொத்தம் 22,600 போ் தோ்வு எழுதினா். இந்த தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தில் 10,010 மாணவா்கள், 12,116 மாணவிகள் என மொத்தம் 22,126 போ் தோ்ச்சி பெற்றனா்.

இத்தோ்வில் மாநில அளவில் கோயம்புத்தூா் மாவட்டம் 98.10 சதவீதம் பெற்று முதல் இடத்தைப் பெற்றது. விருதுநகா் மாவட்டம் 97.90 சதவீதம் பெற்று மாநில அளவில் 2 ஆவது இடத்தைப் பிடித்தது.

கடந்தாண்டு விருதுநகா் மாவட்டம் பிளஸ் 1 பொது தோ்வில் 97.41 சதவீதம் பெற்று 6 ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், நிகழாண்டு 4 இடங்கள் முன்னேறி 2 ஆவது இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி கூறியது:

பிளஸ் 1 பொது தோ்வில் விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 2 ஆவது இடம் பெற்ற்கு தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பே காரணம்.

கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி அளித்ததால் தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக 0.20 சதவீதம் தோ்ச்சி அதிகரித்திருந்தால் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றிருக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com