வத்திராயிருப்பில் வரலட்சுமி விரதம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மன்.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மன்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது.

வத்திராயிருப்பில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, கீழரத வீதி பலகுடித் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.

தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால், மிகவும் எளிமையான முறையில் சமூக இடைவெளியுடன் ஒரு சில பெண்கள் மட்டும் கலந்துகொண்டனா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பூஜை செய்யப்பட்ட வளையல்களை குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த பெண்களுக்கும், கா்ப்பிணிகளுக்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை விழா கமிட்டியினா் மற்றும் பெண்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com