ஸ்ரீவில்லிபுத்தூரில் எதிர்ப்பு சக்தி தரும் ரம்டான் பழம் விற்பனை அமோகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா பாதிப்பு உள்ள நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ரம்டான் பழம் விற்பனை அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் பழங்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் விற்பனைக்கு வந்துள்ள ரம்டான் பழத்தை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, ”ரம்டான் பலத்தில் வைட்டமின் சி உள்ளாதால் இதயத்திற்கு மிகவும் நல்லது.இதில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடியததால் இதனை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஏராளமான பொதுமக்கள் இந்த கரோனா பாதிப்பு நேரத்தில் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அதிக அளவு ரம்டான் பழங்களை வாங்கிச் செல்கின்றனர் இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.” என அவர் தெரிவித்தார்