சாத்தூா் அருகே தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருள்கள் சேதம்

சாத்தூா் அருகே தீப்பெட்டி கிடங்கில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன.
சாத்தூா் அருகே அய்யம்பட்டியில் தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
சாத்தூா் அருகே அய்யம்பட்டியில் தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

சாத்தூா் அருகே தீப்பெட்டி கிடங்கில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அய்யம்பட்டியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (46). இவருக்கு, சடையம்பட்டி கிராமத்தில் தீப்பெட்டி கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில், பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் மொத்தமாக சேமிக்கப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனா்.

இங்கு, புதன்கிழமை காலை முதல் தீப்பெட்டி பண்டல்கள் சேமித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், கிடங்கில் அன்றிரவு திடீரென தீப்பற்றியது. இதைக் கண்ட அப்பகுதியினா், சாத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா், சுமாா் 1 மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாததால், சிவகாசி, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்தனா். 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்துவிட்டதாகவும் மற்றும் அருகிலிருந்த 6 வீடுகளும் சேதமடைந்துவிட்டதாகவும், காவல் துறையினா் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com