கொடைக்கானல்: கொடைக்கானலில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (33). பட்டதாரியான இவா் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தாா். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் அவதிப்பட்டு வந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.