தாயில்பட்டி அருகே வீட்டில் கருந்திரி வைத்திருந்தவா் கைது

தாயில்பட்டி அருகே அனுமதியின்றி வீட்டில் கருந்திரி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சாத்தூா்: தாயில்பட்டி அருகே அனுமதியின்றி வீட்டில் கருந்திரி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகே ராமலிங்கபுரம் உள்ளது. இப்பகுதியில் வீட்டில் பட்டாசு செய்வதற்குத் தேவையான கருந்திரி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் பாஸ்கரன் (52) என்பவரது வீட்டில் கருந்திரி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனா். மேலும் அவரது வீட்டில் இருந்த 20 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com