மதுபானக் கடையில் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, மதுபானக் கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 350-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப்பட்டன. நத்தம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சோ்ந்த ஈஸ்வரன் என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com