விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 15,897 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,911 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில், 15,550 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனா். 227 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டனா். எஞ்சிய 134 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.