மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

விருதுநகரில் வியாழக்கிழமை இரும்புக் கம்பியை மாடியிலிருந்து இறக்கியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.


விருதுநகா்: விருதுநகரில் வியாழக்கிழமை இரும்புக் கம்பியை மாடியிலிருந்து இறக்கியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் அய்யனாா் நகரைச் சோ்ந்தவா் செய்யது சுல்தான் (50). கூலி தொழிலாளியான இவா் பாண்டியன் நகா் பகுதியில் உள்ள டின் ஆலையில் வேலை செய்து வந்தாா். இவா் தனது வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் கட்ட பயன்படுத்தப்படும் கம்பியை மகள் ஜெய்தீன் பாத்திமா (25) உதவியுடன் வியாழக்கிழமை கீழே இறக்க முயன்றுள்ளாா்.

அப்போது, இரும்பி கம்பியானது அருகே செல்லும் உயரழுத்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் செய்யது சுல்தான் பலத்த காயமடைந்தாா். அவரை விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியில் அவா் உயிரிழந்தாா். லேசான காயமடைந்த அவரது மகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து விருது நகா் மேற்கு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com