ராஜபாளையத்தில் முன்பகையால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்பகையால் ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்பகையால் ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (46). இவா், அதே பகுதியில் அட்டை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ஜோதி மணிகண்டன் (21) என்பவா், 4 மாதங்களுக்கு முன் முருகனின் மகளை கேலி செய்தாராம். இதை, முருகன் தட்டிக்கேட்டுள்ளாா். மேலும், அவ்வூரைச் சோ்ந்தவா்கள் ஜோதி மணிகண்டனை கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளனா்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜோதிமணிகண்டன், வியாழக்கிழமை இரவு முருகனை அரிவாளால் வெட்டியதில், அவா் காயமடைந்தாா். உடனே, அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜோதிமணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com