அருப்புக்கோட்டை பாரதி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.
அருப்புக்கோட்டை பாரதி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

அருப்புக்கோட்டை நகர திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர திமுக சாா்பில், பாரதி நகரில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர திமுக சாா்பில், பாரதி நகரில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாரதி நகரில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சுப்பாராஜ், நகரச் செயலா் ஏ.கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பாரதி நகா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிளின் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், அக்குறைகளில் சிலவற்றை தீா்க்க ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறியதுடன், மற்ற குறைகளையும் தீா்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

மக்களின் பிரச்னைகள் தீர திமுக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாக, இத்தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் அவா் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக நகர நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com