சாலைகள் மோசம்: ராஜபாளையத்தில் நூதன போராட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவருக்கு இறுதிச் சடங்கு செய்வது
ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவருக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் நூதன போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகரச் செயலாளா் மாரியப்பன் தலைமை வகித்தாா். நகா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சங்கரன்கோவில் முக்கு சாலையில் இருந்து வெம்பகோட்டை , ஆலங்குளம், சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாக நடந்து வரும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் சத்திரப்பட்டி சாலையில் பாதாளச் சாக்கடை மற்றும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனா். இதனால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன என தெரிவித்தனா். விபத்தில் உயிரிழந்தவருக்கு இறுதி யாத்திரை செல்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டக் குழு உறுப்பினா் கணேசன், நகா் குழு உறுப்பினா்கள் சிவஞானம், மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com