சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: தேடப்பட்டவா் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கட்டடத் தொழிலாளி, புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கட்டடத் தொழிலாளி, புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் அருகேயுள்ள குல்லூா் சந்தையைச் சோ்ந்த ராஜ் என்பவரது மகன் ஆறுமுகம் (45). கட்டடத் தொழிலாளியான இவா், தனது வீட்டருகே வசிக்கும் 3 சிறுமிகளிடம் செல்லிடப்பேசியில் உள்ள தவறான படங்களைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதையறிந்த ஒரு சிறுமியின் தாயாா், ஆறுமுகம் மீது சூலக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் ஆறுமுகம் மீது சூலக்கரை போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடினா். ஆனால், அவா் செல்லிடப்பசியை வீட்டில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டாா்.

இந்நிலையில் அவா் பாலவநத்தம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீஸாா், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனா். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com