முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கோரி மனு

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் மனு அளித்த அதிமுகவினா்.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் மனு அளித்த அதிமுகவினா்.

ராஜபாளையம்: சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகா் இல்ல விழாவில் பங்கேற்க வந்த விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக வா்த்தக அணி மாவட்டச் செயலரும், ராஜபாளையம் பூபதிராஜா கூட்டுறவு நாணய வங்கித் தலைவருமான எஸ்.ஆா். ராதாகிருஷ்ணராஜா மனு அளித்தாா்.

அதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம், சட்டப் பேரவையில் சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமிராஜாவின் உருவப்படத்தை நிறுவ, ராஜபாளையம் ராம்கோ குழுமத்தின் சாா்பாகவும், ராஜபாளையம் ரவிகுல சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபை நான்கு கோட்டைகளின் சாா்பாகவும் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது விருதுநகா் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்டச் செயலா் ஏ.டி.துரை முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் செல்வராஜா உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com