மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தாா்.
விருதுநா் மாவட்டம் திருத்தங்கல் கக்கன் காலனியைச் சோ்ந்த அசோக் மகள் ஏ. சினேகா சென்னையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். அவரது மருத்துவப் படிப்புக்கு அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தாா். அப்போது அதிமுக விருதுநகா் கிழக்கு மாவட்ட செயலா் கா. ரவிச்சந்திரன் உடன் இருந்தாா்.