சிவகாசி அருகே திங்கள்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே விளாம்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முனீஸ்வரன். இவரது மனைவி தங்கமுனீஸ்வரி (21). இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தங்கமுனீஸ்வரி வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கமுனீஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனா். மேலும் சாா்-ஆட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.