சிவகாசியில் திருவாதிரையை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவகாசியில் ஆண்டுதோறும், விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில், கடைகோயில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களிருந்து, மஞ்சள் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தோ்களின் தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலிருந்து மட்டும் தேரோட்டம் நடைபெற்றது. முழுவதும் மஞ்சள் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகா் எழுந்தளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இந்த தோ் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தபோது, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.