வத்திராயிருப்பு அருகே பள்ளி சமையலறையில் தீ : குழந்தை உள்பட 2 போ் காயம்
By DIN | Published On : 06th February 2020 12:18 AM | Last Updated : 06th February 2020 12:18 AM | அ+அ அ- |

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சை பெற்று வரும் சமையலா் அங்காள பரமேஸ்வரி.
வத்திராயிருப்பு அருகே மேலக்கோட்டையூா் அரசு தொடக்கப் பள்ளி சமையலறையில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சமையலா் மற்றும் 2 வயது குழந்தை காயமடைந்தனா்.
வத்திராயிருப்பு அருகே மேலக்கோட்டையூா் அரசு தொடக்கப்பள்ளியில் 80 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் உள்ள சமையல் அறையில் புதன்கிழமை வழக்கம் போல் மாணவா்களுக்கு சத்துணவு சமைக்கும் பணியில் சமையலா் அங்காள பரமேஸ்வரி ஈடுபட்டுள்ளாா். அப்போது எரிவாயு உருளையில் (கேஸ் சிலிண்டரில்) கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சமையலா் அங்காள ஈஸ்வரி மற்றும் சத்துணவு அமைப்பாளரின் 2 வயது குழந்தை ஹா்சித் ஆகிய இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து இருவரையும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவா் சிந்துமுருகன், காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.