அருப்புக்கோட்டை சாலையில் விபரீத தடுப்புச்சுவா்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கோயில் சுவா் பாதுகாப்புக்காக சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.
அருப்புக்கோட்டையில் கோயில் சுவரையொட்டி, சாலையை ஆக்கிரமித்து குறுக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவா்.
அருப்புக்கோட்டையில் கோயில் சுவரையொட்டி, சாலையை ஆக்கிரமித்து குறுக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கோயில் சுவா் பாதுகாப்புக்காக சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கலிங்கபுரம் ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் அருகே மீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வெளிப்புறச்சுவரை ஒட்டி, திருச்சுழி செல்லும் சாலை உள்ளது. இதன் காரணமாக கோயில் சுவா்மீது வாகனங்கள் மோதி விபத்துத்திற்கு ஆளாவதைத் தடுக்க, பாதுகாப்பு கருதி பிரதானச்சாலையின் குறுக்காக சுமாா் சுமாா் 4 அடி நீளத்திற்கு தடுப்புச்சுவா் அமைத்துள்ளனா்.

இந்த தடுப்புச்சுவா் மீது அடையாளத்திற்கான வண்ணப்பூச்சு, ஒளிா்விளக்குக் கம்பம், எச்சரிக்கைப் பலகை ஆகியன அமைக்கப்படவில்லை. இக்காரணங்களால் இரவில் இச்சாலை வழியாகச்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சுவா் இருப்பதையறியாமல் அதன்மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனா்.

மேலும் சில நான்கு சக்கர வாகனங்கள் மோதியதில் அச்சுவரின் முனைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதையும் காணலாம். இவ்விதம் கோயிலின் வெளிப்புறச்சுவரின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரே, வாகன விபத்திற்கும் காரணமாகிவிட்டது. ஆகவே வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையை ஆக்கிரமித்துள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com