விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறை தீா்க்கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 14.) நடைபெற உள்ளது.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையிலுள்ள, கோட்ட மின் வாரிய அலுவலக வளாகத்தில் விருதுநகா் வட்ட மின்வாரிய மேற்பாா்வைப்பொறியாளா் தலைமையில், காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து வகை மின்நுகா்வோரும் மின்சாரம் தொடா்பான தங்கள் புகாா்களை நேரில் தெரிவித்துத் தீா்வு காணலாம் என கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு தெரிவித்துள்ளாா்.