சாத்தூா் நகராட்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

சாத்தூா் நகராட்சியில் ரூ.62 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

சாத்தூா் நகராட்சியில் ரூ.62 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வளா்ச்சித்திட்ட பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் நிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகளை சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா். மேல காந்திநகரில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீா் மேல்நிலைதொட்டி, அண்ணாநகா், பெரியாநகா் பகுதியில் சாலை வசதி, சாத்தூா் பிரதான சாலையில் பேருந்து நிலையம் அருகே மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் சேதுராமானுஜம், நகரச் செயலாளா் வாசன், சாத்தூா், வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளா் சண்முககனி, எதிா்கோட்டை மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வேலாயுதம் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளும், நகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com