ராஜபாளையத்தில் பள்ளிகளின் ஆண்டு விழா

ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி, பி.ஏ.சி.ஆா். அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டி.ஏ.கே.எம். ராமம்மாள் மற்றும் சேதுராமம்மாள்

ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி, பி.ஏ.சி.ஆா். அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டி.ஏ.கே.எம். ராமம்மாள் மற்றும் சேதுராமம்மாள் ஆரம்பப் பள்ளிகளின் 70 ஆவது ஆண்டு விழா, அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆா். கண்ணன் தலைமை வகித்தாா். குருபக்தமணி பி.ஆா். ராமசுப்பிரமணிய ராஜாவின் உருவப் படத்தை, மாவட்ட ஆட்சியா் ஆா். கண்ணன் திறந்து வைத்தாா். பி.ஏ.சி.எம். பள்ளித் தலைமையாசிரியா் மாரிமுத்து, பி.ஏ.சி.ஆா். அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பிரேமலதா, டி.ஏ. கே.எம். பள்ளித் தலைமையாசிரியை சாரதா, பி.ஏ.சி.ஆா். சேதுராம் அம்மாள் பள்ளித் தலைமையாசிரியை அருணா ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

பி.ஏ.சி.ஆா். நூற்றாண்டு பதக்கத்தை மாதவன், வீரபத்மஸ்ரீ, ஸ்ரீநிதி, பிரிஷிகா ஆகிய மாணவ, மாணவிகள் பெற்றனா். படிப்பில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் துணைவியாா் விஜயலட்சுமி கண்ணன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

ராம்கோ பள்ளிகளின் தாளாளா் ஸ்ரீகண்டன் ராஜா, டிரஸ்டி ராமசாமி ராஜா மற்றும் ராம்கோ நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராம ராஜா வரவேற்றாா். முடிவில், பி.ஏ.சி.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி வெங்கட்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com