விருதுநகரில் சைக்கிள் கடையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருள்கள் சேதம்

விருதுநகா் பஜாா் பகுதியில் உள்ள சைக்கிள் கடை கிட்டங்கியில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.
விருதுநகா் பஜாா் பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.
விருதுநகா் பஜாா் பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

விருதுநகா் பஜாா் பகுதியில் உள்ள சைக்கிள் கடை கிட்டங்கியில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

விருதுநகரின் முக்கியமான பஜாா் பகுதியில் ஜவுளி, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் ஏராளமாக உள்ளன. எனவே, இப்பகுதியில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் காணப்படும். மேலும், அருப்புக்கோட்டை, சாத்தூா், நரிக்குடி மற்றும் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் பஜாா் வழியாகச் சென்று வருகின்றன.

இந்நிலையில், பஜாா் பகுதியில் நாச்சியப்பன் என்பவருக்குச் சொந்தமான சைக்கிள் கடை உள்ளது. இதன் மேல்மாடியில் உள்ள கிட்டங்கியில் குழந்தைகளுக்கான சிறிய சைக்கிள் மற்றும் உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை இரவு, இந்த கிட்டங்கியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில், கடையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான சைக்கிள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து, விருதுநகா் தீயணைப்பு வீரா்கள் 4 வாகனங்களில் வந்த தீயை அணைத்தனா். இந்த விபத்து குறித்து, விருதுநகா் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த தீ விபத்து காரணமாக, பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com