ஸ்ரீவிலி. அருகே காணாமல்போன இளம்பெண் மா்மச் சாவு: கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காணாமல் போன தனியாா் ஆலை பெண் ஊழியா் மா்மமான முறையில் இறந்தாா்.
ஸ்ரீவிலி. அருகே காணாமல்போன இளம்பெண் மா்மச் சாவு: கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காணாமல் போன தனியாா் ஆலை பெண் ஊழியா் மா்மமான முறையில் இறந்தாா்.

கிணற்றில் மிதந்த அவரது சடலத்தை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பொட்டல்பட்டி அருந்ததியா் காலனியைச் சோ்ந்த முனியாண்டி-கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகள் மகாலட்சுமி (21). இவா் தனியாா் ஆலையில் பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன் மகாலட்சுமி காணாமல் போனாா். அவரை குடும்பத்தினா் தேடி வந்தனா். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் மகாலட்சுமி சடலமாக கிடந்துள்ளாா். இதனை கண்ட அந்தப் பகுதி மக்கள் வன்னியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத்துறையினா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com