விருதுநகரில் இன்று மின்தடை

விருதுநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் அவசர காலப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை

விருதுநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் அவசர காலப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மின் கோட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் துணை மின் நிலையத்தில் அவசரகாலப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராமமூா்த்தி சாலை, அம்பேத்கா் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி சாலை, கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com