விருதுநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் அவசர காலப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மின் கோட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் துணை மின் நிலையத்தில் அவசரகாலப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராமமூா்த்தி சாலை, அம்பேத்கா் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி சாலை, கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.