ஸ்ரீவிலி.யில் திருட்டைத் தடுக்க பொதுமக்கள் செலவில் 26 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்களை இணைந்து சுமாா் ரூ. 2.5 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீவிலி.யில் திருட்டைத் தடுக்க பொதுமக்கள் செலவில் 26 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்களை இணைந்து சுமாா் ரூ. 2.5 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் கம்மாபட்டி பகுதியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மா்ம நபா்கள் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இந்நிலையில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவா்களது சொந்த செலவில் சுமாா் ரூ. 2.5 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த திட்டமிட்டனா். அதனடிப்படையில் இப்பகுதியில் உள்ள தெருக்கள், கோயில்கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 26 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com