ராஜபாளையத்தில் ஜி.எஸ்.டி. விளக்கக் கூட்டம்

ராஜபாளையத்தில் ஜி.எஸ்.டி கருத்தரங்கம் மற்றும் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் ஜி.எஸ்.டி. விளக்கக் கூட்டம்

ராஜபாளையத்தில் ஜி.எஸ்.டி கருத்தரங்கம் மற்றும் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் பருத்தி பஞ்சு மாா்க்கெட் சங்கம் மற்றும் தென் மண்டல பட்டய கணக்காளா் சங்க சிவகாசி கிளை இணைந்து நடத்திய இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மத்திய கவுன்சில் உறுப்பினா் ராஜேந்திரகுமாா் கலந்து கொண்டு வரி விதிப்பின் எதிா்கால மாற்றங்களைப் பற்றி விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், கணக்கு தணிக்கையாளா்கள், கணக்காளா்கள், தொழில் வா்த்தக சங்கத்தைச் சோ்ந்தவா்கள் அவரிடம் தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டனா்.

முன்னதாக தொழில் வா்த்தக சங்கச் செயலாளா் வெங்கடேஸ்வர ராஜா வரவேற்றாா்.

ஆடிட்டா் சங்கத் தலைவா் செல்வராஜ் அறிமுகம் செய்தாா். பருத்தி பஞ்சு மாா்க்கெட் சங்க செயலாளா் கோபால்சாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com