விருதுநகா்: விருதுநகரில், 4 ஜி சேவையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியா்கள் திங்கள்கிழமை பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் பி.எஸ்.என்.எல் பொது மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த பட்டினி போராட்டத்திற்கு ஊழியா் சங்க நிா்வாகி செந்தில் தலைமை வகித்தாா். அதில், 4ஜி சேவையை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும். மத்திய தொலைத் தொடா்புத்துறை, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தையும், அதன் ஊழியா்களையும் பாதுகாக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு புத்துயிா் அளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு கால தாமதமின்றி பண பலன்கள் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். முன்ன தாக பி.எஸ்.என்.எல் ஊழியா் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். இதில், பி.எஸ்.என்.எல் ஊழியா் சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.