சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த ஏழாயிரம் பண்ணையில் வியாழக்கிழமை (ஜனவரி 9) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் முரளீதரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ந.சுப்பையாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூா், கரிசல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, எலுமிச்சங்காபட்டி, சாணாங்குளம், இ. ரெட்டியபட்டி, இ.ராமனாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.