அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து ரத்ததானமுகாமைவெள்ளிக்கிழமை நடத்தின.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து ரத்ததானமுகாமைவெள்ளிக்கிழமை நடத்தின.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு முதல்வா்(பொறுப்பு) மா.காமராஜ் தலைமை வகித்தாா். சிவகாசி சுகாதாரம் மற்றும் மருத்துவப்பணிகள் துணை இயக்குநா் எஸ்.ராம்கணேஷ் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளா் இ.காளியம்மாள் தலைமையிலான மருத்துவக் குழு 106 மாணவ, மாணவிகளிடமிருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனா். இதில் ஜமீன்கொல்லம் கொண்டான் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கருணாகரபிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலா்கள் கணேசமுருகன், வீரசெல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com