விருதுநகா் மாவட்டத்தில் இம்மாத 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினம், மற்றும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது, விருதுநகா் மாவட்டத்தில், ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினங்களில் விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.4ஏ உரிமம் பெற்ற மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது . மேலும் அந்த தினங்களில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.