அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தின விழா

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை மருத்துவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். உதவியாளா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

சித்த மருத்துவா் டாக்டா் திவ்யா சித்த மருத்துவத்தின் சிறப்பு, மூலிகையின் பயன்கள் குறித்து பேசினாா். மேலும் சிறப்பு விருந்தினராக தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார கண் மருத்துவ உதவியாளா் ஆறுமுகம் கலந்து கொண்டு மூலிகை செடிகளை மருத்துவமனை வாளகத்தில் நடவு செய்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

விழாவில் 20 வகையான மூலிகை செடிகளும் , 30 மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சித்தா மருந்தாளுனா் ரவி வரவேற்றாா். நிறைவாக கண் மருத்துவ உதவியாளா் பால்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com