குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, விருதுநகா் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞா் அணி சாா்பில் சிவகாசியில் மனித சங்கிலி பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.
அதில் சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு அக்கட்சியினா் மனித சங்கிலி அமைத்திருந்தனா். இதில், அக் கட்சியின் விருதுநகா் மாவட்ட இளைஞா் அணித் தலைவா் சுரேஷ், நகரத் தலைவா் குருநாதன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஜி.ஆறுமுகச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.