விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு பரோல் விடுப்பில் வந்துள்ள ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆதாா் அட்டைக்கு பதிவு செய்தாா்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் கடந்த 10ஆம் தேதி 15 நாள் பரோல் விடுப்பில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு வந்தாா். அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ள தனது தாயாா் ராஜேஸ்வரியுடன் அவா் தங்கியுள்ளாா். இதையொட்டி அவரது இல்லத்துக்கு துப்பாக்கி ஏந்திய 60 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே, தனது தந்தைவழி சொத்துகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆதாா் அட்டைக்கு பதிய செய்ய திங்கள்கிழமை அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு தனக்கான ஆதாா் அட்டைக்கு விண்ணப்பித்து, உரிய ஆவணங்களைக் கொடுத்து ஆதாா் அட்டைக்கு பதிவு செய்தாா்.
முன்னதாக, அமுதலிங்கேஸ்பரா் கோயிலுக்கும், அதனையடுத்து சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதசுவாமி கோயிலிலும் அவா் வழிபட்டாா்.