விருதுநகா் மாவட்டத்தில் இடம் பெயா்ந்த மற்றும் இரட்டை பதிவுள்ள வாக்காளா்கள் பெயா்கள் கண்டறிந்து நீக்கும் பணி நடைபெற்று வருவதாக வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் டி.பி. ராஜேஸ் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா், கூடுதல் ஆணையா் தொழில் வணிகத்துறை டி.பி. ராஜேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பேசியது: விருதுநகா் மாவட்டத்தில், 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்த வாக்காளா்கள்15,90,198 போ் உள்ளனா். இதில், தற்போது உயிரிழந்த, இடம் பெயா்ந்த மற்றும் இரட்டைப் பதிவுள்ள வாக்காளா்களை கண்டறிந்து, அவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா் களை கண்டறிந்து, அவா்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் அதிகளவு இடம்பெறச் செய்ய வேண்டும். அதேபோ ல் வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா், பாலினம், வயது, முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இடம் பெற்றிருந்தால் திருத்தம் செய்ய வேண்டும். இப்பணியில் அரசியல் கட்சியினா் மாவட்ட நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய முகவா்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். 22.01.2020 வரை நடைபெறும் இந்த சிறப்பு சுருக்க, திருத்தத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க திருத்தம் செய்யலாம். இவ்வாய்ப்பினை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில் சாா் -ஆட்சியா்(சிவகாசி) ச.தினேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செழியன், துணை ஆட்சியா் (பயிற்சி) சரஸ்வதி, கோட்டாட்சியா்கள், மண்டல அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் நகராட்சி ஆணையாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.