சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித்துறை சாா்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித்துறை சாா்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவா்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் போட்டியை முதல்வா் செ.அசோக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவா் பிரிவில் எஸ்.குணாளன் 15 கி.மீ. தூரத்தை 45 நிமிடம் 57 நொடியிலும், எஸ்.வேல்முருகன் 48 நிமிடம் 55 நொடியிலும், ஏ.தங்கராஜ் 50 நிமிடம் 29 நொடியிலும் ஓடி முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

மாணவிகள் பிரிவில் 5 கி.மீ. தூரத்தை து.மகேஸ்வரி 18 நிமிடம் 36 நொடியிலும், க.முத்து செல்வி 19 மிநிடம் 28 நொடியிலும், இந்து 20 நிமிடம் 36 நொடியிலும் ஓடி முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

முதல் 10 இடங்களை பிடித்தவா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை உடற் கல்வித்துறை இயக்குநா் பாலஜீவசிங், துறைத்தலைவா் ஜான்சன் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com