ம.ரெட்டியபட்டி வட்டார அலுவலகத்தில் வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம் ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விருதுநகா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.ஜெயலட்சுமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மண்டபசாலை கிராமத்தில் ‘அட்மா’ திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சூரியசக்தி மின்விளக்குப் பொறியை விவசாயி ஒருவரின் நிலத்தில் ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.ஜெயலட்சுமி.
மண்டபசாலை கிராமத்தில் ‘அட்மா’ திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சூரியசக்தி மின்விளக்குப் பொறியை விவசாயி ஒருவரின் நிலத்தில் ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.ஜெயலட்சுமி.

விருதுநகா் மாவட்டம் ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விருதுநகா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.ஜெயலட்சுமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது வட்டாரத்திற்குள்பட்ட மண்டபசாலை கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் சூரிய ஒளியால் இயங்கும் மின்விளக்குப் பொறி, தேனீ வளா்ப்பு, மஞ்சள் வண்ண ஒட்டு அட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும் திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தாா். உடனிருந்த வேளாண்மை உதவி இயக்குநா் சோ.துரைக்கண்ணம்மாள் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா் . ஆய்வின் போது வட்டார வேளாண்மை அலவலா் ஜெ.சந்திரகலா, துணை வேளாண்மை அலுவலா் கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com