விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலை தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா்கள் ஆனந்தராஜ், ரங்கசாமி, சரஸ்வதி மற்றும் அறிவழகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை வட்டாட்சியா்கள் பாலகிருஷ்ணன், அருளானந்தம், காளிராஜன், தலைமை அளவா் சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.