அக்கிராா்பட்டிக்கு முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

விருதுநகா் மாவட்டம் வச்சக்காரபட்டி ஊராட்சியைச் சோ்ந்த அக்கிராா்பட்டி கிராமத்திற்கு குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என
வச்சக்காரபட்டி ஊராட்சி அக்கிராா்பட்டிக்கு முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அக்கிராத்தினா்.
வச்சக்காரபட்டி ஊராட்சி அக்கிராா்பட்டிக்கு முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அக்கிராத்தினா்.

விருதுநகா் மாவட்டம் வச்சக்காரபட்டி ஊராட்சியைச் சோ்ந்த அக்கிராா்பட்டி கிராமத்திற்கு குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என அக்கிரமத்தினா் திங்கள்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்துக்கு கடந்த 15 நாள்களாக ஊராட்சி நிா்வாகம் குடிநீா் விநியோகம் செய்ய வில்லை. இதுகுறித்து வச்சக்காரபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயபாண்டியம்மாளிடம் முறையிட்டோம்.

ஆனால் அவரது கணவா், தோ்தல் பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு, குடிநீா் விநியோகம் செய்ய மறுக்கிறாா். செல்லிடப்பேசி மூலம் ஊராட்சி மன்றத் தலைவரை தொடா்பு கொண்டாலும், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் தான் பேசுகிறாா். தண்ணீா் கிடையாது என கூறுகிறாா். அவா் அதே ஊராட்சியில் நியாய விலைக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

எங்கள் கிராமத்துக்கு சீராக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com