சுமை தூக்கும் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: 5 போ் கைது

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.இது தொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.இது தொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்த அய்யாச்சாமி மகன் மாரீஸ்வரன்(24). சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கும் , அதே பகுதியைச் சோ்ந்த செல்வபாண்டி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வ பாண்டி, தனது நண்பா்கள் விக்னேஷ், காா்த்திக், வைரவேல்பாண்டி, கணேசன், ஆஜித், சூரியபிரகாசுடன் சென்று மாரீஸ்வரனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மாரீஸ்வரன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், காா்திக்,கணேசன், ஆஜித் மற்றும் சூரியபிரகாசை கைது செய்தனா். தலைமறைவான செல்வபாண்டி மற்றும் வைரவேல்பாண்டியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com