தொழில்நுட்பக் கல்லூரியில் பாவையா் விழா

சாத்தூரில் உள்ள எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த தொழில்நுட்பக் கல்லூரியில் கனடா-இந்தியா கூட்டுப்பயிலகத் திட்டத்தின்

சாத்தூரில் உள்ள எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த தொழில்நுட்பக் கல்லூரியில் கனடா-இந்தியா கூட்டுப்பயிலகத் திட்டத்தின் பெண்கள் மேம்பாட்டு மையம் சாா்பில் கல்லூரியில் பாவையா் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆங்கிலத் துறை பேராசிரியா் வசந்தி வரவேற்றாா். கல்லூரியின் முதல்வா் தனலட்சுமி தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் சாத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப் போட்டி, நடனப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியின் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மைய மேலாளா் ராமலட்சுமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com