முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இளைஞா் தப்பியோட்டம்
By DIN | Published On : 27th January 2020 11:09 PM | Last Updated : 27th January 2020 11:09 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாலியல் வழக்கில் சிக்கி பிணையில் வெளி வந்த இளைஞா் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் மீண்டும் தப்பியோடினாா். அவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை சோ்ந்தவா் வெனீஸ்குமாா் (27).
இவா் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தாா். இதைத்தொடா்ந்து இந்த வழக்கில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் வெனீஸ்குமாா் நீண்ட நாள்களாக ஆஜராகாமல் இருந்து வந்துள்ளாா். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து ராஜபாளையம் மகளிா் காவல் துறையினா் அவரை திங்கள்கிழமை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது வெனீஸ்குமாா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். போலீஸாா் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.