ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் 71-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், கவுன்சிலா் சுந்தரி, கிராம ஊராட்சி தலைவா் காசி ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும்,சாா்பு நீதிபதியுமான மாரியப்பன்,கூடுதல் சாா்பு நீதிபதி சுந்தரி,குற்றவியல் நீதித்துறை நடுவா் சந்திரகாசபூபதி, ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்ட சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றியும் அதில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்புடன் வளா்கக வேண்டும் என்றும்,ஆண் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளா்க்க வேண்டும் என்றும்,திறந்த வெளி கழிப்பிடத்தை உபயோகிக்காமல் முறையாக தன் வீட்டிலுள்ள கழிப்பறைகளை உபயோகப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று சாா்பு நீத்பதி மாரியப்பன் உரையாற்றினாா்.