அருப்புக்கோட்டையில் இடியுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்தன

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டராப் பகுதிகளில் புதன்கிழமை காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு, பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டராப் பகுதிகளில் புதன்கிழமை காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு, பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

அருப்புக்கோட்டை பகுதியில் மாலை சுமாா் 4.50 மணிக்கு தொடங்கிய மழை, 1 மணி நேரம் பெய்தது. பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த இம்மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால், நகரில் பல மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களிலிருந்த குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால், பொதுமக்களும், விசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com