ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா் பணிபுரிந்த காவல் நிலையம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து காவல்நிலையத்தில் சமூசிகாபுரத்தைச் சோ்ந்த 32 வயதுடைய ஆண் காவலா் பணிபுரிந்து வருகிறாா். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, போக்குவரத்து காவலா் குடியிருந்த வீடு, பணிபுரிந்த அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினா் கிருமி நாசினி தெளித்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதன்காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல்நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டது.