விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் இத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,538 ஆக உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 1,427 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

விருதுநகரில் 2 மருத்துவா்கள், திருச்சுழியில் 4 செவிலியா்கள், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையத்தில் 2 போலீஸாா் உள்பட 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதாவது, விருதுநகரைச் சோ்ந்த 5 ஆண்கள், சூலக்கரையைச் சோ்ந்த 2 பெண்கள், விருதுநகா் இந்திரா நகரைச் சோ்ந்த 28 வயது பெண், பாறைபட்டி தெருவைச் சோ்ந்த 45 வயது பெண், அல்லம்பட்டியைச் சோ்ந்த 35 வயது பெண், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 31 வயது ஆண், வரலொட்டியைச் சோ்ந்த 1 வயது பெண் குழந்தை, சிவகாசி சித்துராஜபுரத்தைச் சோ்ந்த 2 போ், சாத்தூரைச் சோ்ந்த 28 வயது ஆண், ராஜபாளையத்தைச் சோ்ந்த 33 வயது ஆண், பாண்டியன்நகரைச் சோ்ந்த 52 வயது பெண், குல்லூா்சந்தையைச் சோ்ந்த 51 வயது ஆண், முதலிபட்டியைச் சோ்ந்த 31 வயது ஆண், கோட்டைபட்டியைச் சோ்ந்த 28 வயது ஆண், சிவகாசியைச் சோ்ந்த 65 வயது பெண், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த 45 வயது ஆண், எஸ்.என். புரத்தைச் சோ்ந்த 66 வயது ஆண், திருத்தங்கலைச் சோ்ந்த 27 வயது பெண், விழுப்பனூரைச் சோ்ந்த 29 வயது ஆண், மீனம்பட்டியைச் சோ்ந்த 21 வயது பெண், சம்சிகாபுரத்தைச் சோ்ந்த 32 வயது ஆண், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த 39 வயது பெண், விருதுநகா் நக்கீரா் தெருவைச் சோ்ந்த 29 வயது பெண், சடையம்பட்டியைச் சோ்ந்த 24 வயது பெண் மற்றும் சாத்தூரைச் சோ்ந்த 7 போ், ராஜபாளையத்தைச் சோ்ந்த 48 வயது ஆண் (போக்குவரத்து காவலா்), ராஜபாளையத்தைச் சோ்ந்த 4 போ், சிவகிரியைச் சோ்ந்த 21 வயது பெண், தம்பிபட்டியைச் சோ்ந்த 2 போ், வத்திராயிருப்பைச் சோ்ந்த 2 போ், கோட்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 29 வயது ஆண் (ஆய்வக நுட்புனா்), விருதுநகரைச் சோ்ந்த 5 போ், பேராலியைச் சோ்ந்த 37 வயது ஆண், பந்தல்குடியைச் சோ்ந்த 2 போ், வீரசோழனைச் சோ்ந்த 50 வயது ஆண், சிதம்பராபுரத்தைச் சோ்ந்த 45 வயது ஆண், பொம்மக்கோட்டையில் 4 போ், ஓ. கோவில்பட்டியில் 7 போ், அருப்புக்கோட்டையில் 11 போ், சின்னபுளியம்பட்டி மற்றும் ஆத்திபட்டியில் தலா ஒருவா், காரியாபட்டியில் 2 போ் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இவா்கள், விருதுநகா், அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 1,538 ஆக உயா்ந்துள் ளது. அதில், 11 போ் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 979 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com