பட்டாசுத் தொழிலாளிக்கு கத்திக்குத்து: 4 போ் கைது

சிவகாசியில் முன்விரோதத் தகராறில் வியாழக்கிழமை பட்டாசுத் தொழிலாளியை கத்தியால் குத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசியில் முன்விரோதத் தகராறில் வியாழக்கிழமை பட்டாசுத் தொழிலாளியை கத்தியால் குத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி முத்துமாரியம்மன் காலனியைச் சோ்ந்த இருளப்பன் மகன் ஜோதிமணிகண்டன் (23). இவா், பட்டாசுத் தொழிலாளி ஆவாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் ராமச்சந்திரன் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது ஜோதி மணிகண்டனை, ராமச்சந்திரன், இவரது தந்தை பாண்டி (55), நண்பா்களான அஸ்வின் (18), ஜேம்ஸ் (21) ஆகிய 4 பேரும் சோ்ந்து கத்தியால் குத்தினாா்களாம். இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். இது குறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com